தங்கத்துடன் இரு இந்தியர்கள் கைது
சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த இந்தியர்கள் இருவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் இருந்து வந்த fly dubai விமான சேவைக்கு சொந்தமான FZ 551 விமானத்தில் குறிப்பிட்ட நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் ஹெரோயின் இருப்பதாக சந்தேகித்து சோதனை செய்யும் போதே அவர்களுடைய பணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 தங்க பிஸ்கட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த நபர்களிடம் இருந்து 232 கிராம் எடை கொண்ட 35 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இருவரும் டுபாய் நாட்டில் 3 நாட்கள் தங்கி பின்னர் இலங்கைக்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.