தெமட்டகொட பகுதியிலும் குண்டுவெடிப்பு!


கொழும்பு - தெமட்டகொட பகுதியில் சற்று முன் குண்டுவெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

தெமட்டகொட வீட்டுத் திட்டத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இலங்கையில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக பல பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று வரும் நிலையில் தெமட்டகொடயில் இடம்பெற்றுள்ளது எட்டாவது குண்டு வெடிப்பு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top