கியூபாவின் புரட்சித் தலைவர் பிடல் கேஸ்ட்ரோவின்
90-வது பிறந்தநாள்90 மீட்டர் கின்னஸ் சுருட்டு
கியூபா
நாட்டின் விடுதலைக்கு
வித்திட்ட முன்னாள்
ஜனாதிபதி பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது
பிறந்த நாளுக்கு
சிறப்பு சேர்க்கும்
வகையில் அந்நாட்டின்
பிரபல சுருட்டு
தயாரிப்பாளர் 90 மீட்டர் நீளமுள்ள சுருட்டு ஒன்றை
தயாரித்து, அந்த சாதனையை தங்கள் நாட்டின்
புரட்சித் தலைவருக்கு
சமர்ப்பணம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் பேராதிக்கத்தை துணிச்சலுடன் எதிர்த்துநின்று அமெரிக்காவின் அடிவாசலில் அமைந்துள்ள கரிபியன் நாடான கியூபாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை ஏற்படுத்திய அந்நாட்டின் புரட்சித் தலைவர் பிடல் கேஸ்ட்ரோவின் 90-வது பிறந்தநாளை அந்நாட்டு மக்கள் நேற்று கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தலைநகர் ஹவானாவில் உள்ள கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து நேற்று சனிக்கிழமை அதிகாலைவரை வண்ணமயமான வாணவேடிக்கை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல், நாடு முழுவதும் அவரது பிறந்தநாள் வெகு எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
ஹவானா நகரில் உள்ள காரல் மார்க்ஸ் கலையரங்கத்தில் பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பாடல்களுடன் கூடிய நாட்டிய நிகழ்ச்சிகளை சிறுவர்-சிறுமியர் நடத்தினர். முதுமை காரணமாக வெகு அரிதாக மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிடல் கேஸ்ட்ரோ, நட்புநாடான வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோவுடன் சேர்ந்து முன்வரிசையில் அமர்ந்து இந்த கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.
இந்நிலையில், தங்கள் நாட்டு தலைவரின் பிறந்தநாளுக்கு மேலும் கெளரவம் சேர்க்கும் வகையில் இங்குள்ள பிரபல சுருட்டு தயாரிப்பாளரான கியூவெட்டோ என்றழைக்கப்படும் ஜோஸ் கேஸ்ட்டலர் கெய்ரோ என்பவர் 90 மீட்டர் (295 அடி) நீளம் கொண்ட ’மெகா சைஸ்’ சுருட்டு ஒன்றை தயாரித்து, இதன் மூலம் தான் படைத்த புதிய கின்னஸ் சாதனையை பிடல் காஸ்டிரோவுக்கு சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளார்.
கியூபாவில் அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிராக 1959-ம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியை அடுத்து ஆட்சியை கைப்பற்றி, 1985-ம் ஆண்டுவரை சுமார் அரை நூற்றாண்டு காலம் அந்நாட்டின் ஆட்சிக்கு தலைமை தாங்கிவந்த பிடல் கேஸ்ட்ரோ பல சந்தர்பங்களில் வாயில் புகையும் மெல்லிய, நீளமான சுருட்டுடன்தான் காட்சியளிப்பார்.
அமெரிக்காவும்,
அதன் அண்டை
நாடான கியூபாவும்
அரை நூற்றாண்டுக்கும்
மேலாக பரம
எதிரிகளாக இருந்தன.
1959-ம் ஆண்டு
அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை
பிடெல் காஸ்ட்ரோ
தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர்
இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது.
கியூபாவுடன்
நட்பு பாராட்டுவது
என்று அமெரிக்க
ஜனாதிபதி பராக்
ஒபாமா முடிவு
செய்து அதற்கான
முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில்
கியூபா நாட்டு
தூதரகம் கடந்த
ஆண்டு ஆகஸ்ட்
மாதம் திறக்கப்பட்டது.
அதேபோன்று கியூபாவில்
அமெரிக்க தூதரகம்
திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி
ஒபாமா
சமீபத்தில் கியூபாவுக்கு சென்றார்.
கியூபாவின்
முன்னாள் ஜனாதிபதி
பிடல் காஸ்ட்ரோவின்
தம்பியான தற்போதைய
ஜனாதிபதி ரவுல்
காஸ்ட்ரோவை, ஒபாமா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது
இருநாட்டு நல்லுறவு
உள்ளிட்ட பல்வேறு
விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
உடல்நலம்
குன்றிய நிலையில்
சக்கர நாற்காலியின்
துணையின்றி நடமாட முடியாத நிலையில் இருக்கும்
கியூபா கம்யூனிஸ்ட்
கட்சியின் மூத்த
தலைவரும், முன்னாள்
ஜனாதிபதியுமான
பிடல் காஸ்ட்ரோ
- ஒபாமாவை சந்தித்துப்
பேச மறுத்து
விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment