நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜேதாச ராஜபக்ஸ, அமைச்சுக்கு சென்று ஊழியர்கள் சந்தித்து உரையாடியதுடன் விடைபெற்றுக்கொண்டார்.
அத்துடன் அவரது தனிப்பட்ட ஊழியர்களும் அமைச்சில் இருந்த தமது ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
அமைச்சரவை கட்டுப்பாடு மற்றும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதாகவும் கடந்த அரசாங்கத்தில் நடந்த ஊழல்கள், குற்றங்கள், கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என விஜேதாச ராஜபக்ஸவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன். விளக்கமளித்து, திருத்திக்கொள்ள நான்கு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
எனினும் அவர் விளக்கமளிக்கவில்லை என்பதுடன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் தெளிவுப்படுத்தவில்லை.
இதனால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை, ஜனாதிபதிக்கு அறிவித்திருந்ததுடன் அதனை ஏற்ற ஜனாதிபதி விஜேதாச ராஜபக்ஸவை அமைஸசர் பதவியில் இருந்து நீக்கினார்.
Related Posts
இலங்கையில் ஓய்வூதியத்தை இழக்கும் 32 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையில் ஓய்வூதியத்தை இழக்கும் 32 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த அரசாங்கத்த[...]
19 தேசிய பட்டியல் எம்பிக்களின் வர்த்தமானி அறிவிப்பு
19 தேசிய பட்டியல் எம்பிக்களின் வர்த்தமானி அறிவிப்பு தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்ய[...]
தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 2015,2020ஆண்டுகளின் விருப்பு வாக்குகள்
தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 2015,2020ஆண்டுகளின் விருப்பு வாக்[...]
பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம்!
பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம்! நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பா[...]
தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்
தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில் இதுவரையில வெளியான 11 மாவட்ட ரீதியிலான தேர்தல் பெறுபேறுகளுக்க[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.