உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை வலியுறுத்தி
சாய்ந்தமருதில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள்
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை வலியுறுத்தி அப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்
செய்திகள் தெரிவிக்கின்றன.
- எலி வளையானாலும் தனி வளை வேண்டும் எமதூருக்கு.
- தடுக்காதே தடுக்காதே பிரதேச சபையை தடுக்காதே. தன்மானம் காப்போம் தாய் மண்ணைக் காப்போம்.
- துணிந்தெழு துணிந்தெழு. தாய் மண்ணை மீட்க துணிந்தெழு.
- நம்மை நாமே ஆட்சி செய்வோம். தந்துவிடு தந்துவிடு எமதுரிமையைத் தந்துவிடு.
- மீண்டெழுவோம் மீட்டெடுப்போம். எமது சபையை மீட்டெடுப்போம். நமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம்.
- தனியான உள்ளூராட்சி மன்றம் இல்லையேல் துணிவான மக்கள் போராட்டம் தொடர்ந்து வெடிக்கும்.
போன்ற வாசகங்கள் காணக்கூடியதாகவிருந்தது.
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படும் என தகவல்கள்
வெளிவந்துள்ள நிலையிலேயே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இங்கு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் பிரதியமைச்சர் ஹரீஸ் உட்பட சில அரசியல்வாதிகளையும் கண்டித்த சில வாசகங்களையும் காணமுடிகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.