பேருவளை - அளுத்கம சம்பவங்களினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
பேருவளை
- அளுத்கம பிரதேசத்தில் 2014 ஆம்
ஆண்டு இடம்பெற்ற
தூரதிஷ்ட
சம்பவங்களினால் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு
வழங்க அரசாங்கம்
தீர்மானித்துள்ளது.
சம்பவத்தில்
உயிரிழந்த ஒவ்வொருவருக்கும்
தலா 20 லட்சம்
ரூபா என்ற
ரீதியில்
அவர்களது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கும், காயமடைந்த
நபர் ஒருவருக்காக
ஆகக் கூடிய
தொகையாக
500,000 ரூபா வீதம் இழப்பீடு
வழங்கப்படவுள்ளது.
2014ம் ஆண்டு ஜுன் மாதம்
15 மற்றும் 16ம் திகதிகளில் பேருவளை, அளுத்கமை
ஆகிய பிரதேசங்களில்
ஏற்பட்ட சம்பவங்களினால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக இழப்பீட்டை வழங்குவதற்காக
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு,
மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்
டி.எம்.சுவாமிநாதன்
சமர்ப்பித்த ஆவணத்தறிகு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.