இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கலந்துகொள்ளாமல்
காத்தான்குடி நகரசபைக்கான
புதிய கட்டடம் பிரதமரால் திறந்து வைப்பு
இராஜாங்க
அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்துகொள்ளாத நிலையில் காத்தான்குடி நகரசபைக்கான
புதிய கட்டடம்
இன்று பிரதமர்
ரணில் விக்ரமசிங்கவினால்
திறந்து வைக்கப்பட்டது.
மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக இருந்த போது ஒதுக்கப்பட்ட நான்கரை கோடி ரூபா செலவில் இந்த நகரசபைக்கான கட்டடம் அமைக்கப்பட்டிருந்தது.
நவீன
முறையில் அமைக்கப்பட்டுள்ள
இந்த புதிய
நகரசபைக்கான கட்டட திறப்பு விழா கிழக்கு
மாகாண முதலமைச்சர்
ஹாபீஸ் நசீர்
அஹமட்டின் தலைமையில்
நடைபெற்றதுடன், இந்த திறப்பு விழாவில் பிரதர்
ரணில் விக்ரமசிங்க
பிரதம அதிதியாக
கலந்துகொண்டார்.
சிறப்பு
அதிதியாக அமைச்சர்
ஜோன் அமரதுங்க,
அமைச்சர் ரவூப்
ஹக்கீம், பிரதி அமைச்சர் பைஸல் காசீம்,, கிழக்கு மாகாண
விவசாய அமைச்சர்
கி.துரைராஜசிங்கம்,
கிழக்கு மாகாணசபையின்
தவிசாளர் கலபதி
உட்பட பலர்
கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.