சம்மாந்துறை
தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின்
ஸ்தாபகர்
அல்ஹாஜ் ஷேகுத் தப்லீக் அலியார் ஹஸரத்தின்
மறைவுக்கு அமைச்சர் றிஷாத் அனுதாபம்
பெரிய
ஹஸரத் என
எல்லோராலும் கண்ணியமாக அழைக்கப்படும் சம்மாந்துறை
தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர் அல்ஹாஜ் ஷேகுத் தப்லீக் அலியார்
ஹஸரத் அவர்கள்
வபாத்தான செய்தி
தனக்கு கவலை
அளிப்பதாக அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறையின்
மூத்த ஆலிம்களில்
ஒருவராகவும் தப்லீகுள் இஸ்லாம் அரபிக் கல்லூரியின்
ஸ்தாபகராகவும்
பணியாற்றிய பெரிய ஹஸரத் சம்மாந்துறை மண்ணின்
அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர். அந்த ஊரின்
பெருமையை இவர்
மூலம் துலங்கியது
என்றால் அதற்கு
மாறுபட்ட கருத்துக்களுக்கு
இடமில்லை.
சம்மாந்துறை
என்றால் புரியாத
வெளியூர் முஸ்லிம்களிடம்
அலியார் ஹஸரத்தின்
ஊர் என்றார்
இலகுவாக புரிந்துவிடும்
அளவுக்கு அவர்
சமூகப்பணிகளிலும் ஆத்மீகப்பணிகளிலும் மார்க்கப்பணிகளிலும்
திகழ்ந்து விளங்கியவர்.
அவரது இழப்பால்
கவலையுறும் சம்மாந்துறை மக்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றேன்.
அல்லாஹுத்தாலா அன்னாரின் பாவங்களை
மன்னித்து மறுமை
வாழ்வை ஒளிபெறச்
செய்வானாக.
அலியார்
ஹஸ்ரத்துக்கு எல்லாம்வல்ல அல்லாஹ் ஜென்னதுல் பிர்தௌஸை
வழங்குவானாக.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.