பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்
ஏறாவூர் புதிய நகரசபை கட்டிடம் திறப்பு
ஏறாவூர்
புதிய நகரசபை
கட்டிடத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்களின்
பாவனைக்காக திறந்து வைத்தார்.
மத்திய
அரசாங்கத்தின் 3 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பகட்ட
பணிகள் ஆரம்பித்து
வைக்கப்பட்டன.
அமைச்சர்
ரவூப் ஹக்கீம், அமைச்சர் ஜோன் அமரதுங்க, கிழக்கு மாகாண
முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், கிழக்கு மாகாண
ஆளுனர் ரோஹித்த
போகொல்லாகம, பிரதியமைச்சர்
பைஸல் காசிம்,
பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், கிழக்கு மாகாண
சுகாதார அமைச்சர்
ஏ.எல்.
நஸீர் மாகாண
சபை உறுப்பினர்கள்,
உள்ளிட்ட பலர்
இதில் கலந்துகொண்டனர்.
முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா இவ்வைபவத்தில்
கலந்து கொள்ளவில்லை. இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே முஸ்லிம்
காங்கிரஸின் பிரதிநித்துவம் நாடாளுமன்றத்தில் இருந்து கொண்டிருப்பது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.