மண்டைதீவில்
படகு விபத்து
– 6 மாணவர்கள்
உயிரிழப்பு!!
பண்ணை,
மண்டைதீவு கடற்
பகுதியில் சற்றுமுன்னர்
நடந்த படகு
விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல்
போயிருந்த நிலையில்
அவரது உடலும்
கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்கள்
இம்முறை உயர்தரப்
பரீட்சை எழுதும்
மாணவர்கள் என்று
தெரிவிக்கப்படுகின்றது.
மண்டை
தீவுக்கு அருகில்
உள்ள படகு
தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகில் சென்ற
சமயமே இந்தச்
சம்பவம் நடந்துள்ளது.
அந்தப்
பகுதியில் கட்டப்பட்டிருந்த
படகு ஒன்றை
எடுத்து கடலுக்குச்
சென்றபோதே இந்த
இடர் நடந்துள்ளது
என்று கூறப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின்
சடலம் யாழ்.
போதனா வைத்தியசாலைக்கு
கொண்டு வரப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் நல்லூர், கொக்குவில் மற்றும் உரும்பிராய்
பகுதியை சேர்ந்தவர்கள்
என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்,
குறித்த சம்பவம்
தொடர்பில் பொலிஸார்
மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த மாணவர்களின் பெயர்
விபரங்கள் வெளியாகியுள்ளது.
நந்தன் ரஜீவன் (உரும்பிராய்
) 18 ,
நாகசிலோஜன் சின்னத்தம்பி (உரும்பிராய்)
17 ,
தனுரதன் (கொக்குவில்) 20 ,
பிரவீன் (நல்லூர்) 20 ,
தினேஷ் (உரும்பிராய்) 17 ,
தனுசன் (சண்டிலிப்பாய்) 18
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.