ஹஜ் தினத்தில் இடம்பெறவிருந்த உயர்தர பரீட்சை
பொது அறிவு பாடத்தை 4ம் திகதிக்கு நடாத்த
கல்வி அமைச்சு முடிவு
அமைச்சர் ரிஷாட்டின் கோரிக்கை ஏற்பு
எதிர்வரும்
2ஆம் திகதி
இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தர
பரீட்சையின் பொது அறிவு பாடத்தின் பரீட்சையை
4ஆம் திகதி
நடாத்துவதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக
அமைச்சர் அகிலவிராஜ்
காரியவசம் தெரிவித்தார்.
ஏதிர்வரும்
2ஆம் திகதி
முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் தினத்தை கொண்டாடுவதால்,
அன்று இடம்பெறவிருந்த
குறிப்பிட்ட பாடத்திற்கான பரீட்சையை, பிற்போடுமாறு அமைச்சர்
ரிஷாட் பதியுதீன்,
எழுத்து மூலம்
விடுத்த வேண்டுகோளை
ஏற்றே தாம்
இந்த நடவடிக்கையை
மேற்கொண்டதாக அமைச்சர் அகிலவிராஜ் அறிவித்துள்ளார்.
பரீட்சையை
திட்டமிட்டப்படி உரிய தினத்தில் நடாத்தாமல், 4ஆம்
திகதி நடாத்துவதன் மூலம், பரீட்சை திணைக்களத்திற்கு மேலதிக செலவும், சில கஷ்டங்களும்
இருக்கின்றபோதும், முஸ்லிம்களின் புனித
பண்டிகையான ஹஜ் பெருநாள் தினத்தில் அந்தப்
பரீட்சையை நடாத்துவது
முஸ்லிம் சமூகத்தைச்
சேர்ந்த மாணவர்களுக்கு
ஏற்படும் அசௌகரியத்தை
கவனத்திற்கொண்டே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சர்
ரிஷாட் பதியுதீனிடம்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.