காத்தான்குடி
கடற்கரையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
காத்தான்குடிப்
பகுதியில் ஆர்ப்பாட்டம்
ஒன்று இன்று
காலை இடம்பெற்றது.
காத்தான்குடி, கல்முனை, வாழைச்சேனை பகுதிகளைச்
சேர்ந்த மீனவர்களுக்குச் சொந்தமான அலியா போட்டில் பிடிக்கப்பட்ட மீன்களை இரவில் திருடுவதைத்
தடுக்குமாறு கோரிக்கை விடுத்தே மீனவர்களால் இந்த ஆர்ப்பாட்டம்
முன்னெடுக்கப்பட்டது.
இந்த
ஆர்ப்பாட்டம் காத்தான்குடி கடற்கரை முன்பாக இடம்பெற்றது.
தேற்றாத்தீவு
மற்றும் களுதாவளை
பிரதேசங்களைச் சேர்ந்த சில மீனவக் குழுவினரே
இவ்வாறான செயல்களில்
ஈடுபடுவதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை,
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் காத்தான்குடி பிரதேச செயலகம்
வரை சென்று
மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி,
கல்முனை,
வாழைச்சேனை மீனவர்கள் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.