கல்முனைப் பிரதேசத்திலுள்ள கடற்கரை வீதிகள்
காத்தான்குடி கடற்கரை வீதிகளைப் போன்று
அபிவிருத்தி செய்யப்படாமைக்கான காரணம்
தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் .ஹரீஸ்
காத்தான்குடி கடற்கரை வீதிகளைப் போன்று கல்முனைக் கடற்கரை வீதிகள்
அபிவிருத்தி செய்யப்படாமைக்கு ஆழ்கடல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது
என்பதே காரணம் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் விளக்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதி அமைச்சர் தெரிவித்திருப்பதாவது,
கல்முனைப் பிரதேசத்திலுள்ள பிரதான கடற்கரை வீதிகள் காத்தான்குடி கடற்கரை வீதிகளைப் போன்று அபிவிருத்தி செய்யப்படவில்லை என பலர் கூறுகின்றனர். கல்முனைப்
பிரதேசத்தில் உள்ள கடற்கரை வீதிகளை அபிவிருத்தி செய்வதாக இருந்தால் நாம் எப்போதே அபிவிருத்தி
செய்திருப்போம். ஆனால், இங்கு தினமும் கஷ்டப்படுகின்ற ஆழ்கடல் மீனவர்களின் வாழ்வாதாரம்
பாதிக்கப்படக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருந்து வந்தோம்.
இன்று கல்முனைப் பிரதேச கடற்கரை வீதியின் அபிவிருத்திக்கான கோஷம்
பரவலாக முன் வைக்கப்படுகின்றது. அதயும் எதிர்காலத்தில் செய்யவேண்டியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.