இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு
தங்கம் கடத்த முற்பட்ட நால்வர் கைது
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஒருதொகை தங்ககட்டிகளை கடத்த முற்பட்ட நால்வர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை (21)சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமது உடலில் தங்கக்கட்டிகளை மறைத்து எடுத்த செல்ல முற்பட்டுள்ள நிலையில் சுங்கப்பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 387.81 கிராம் நிறையுடைய தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றின் பெறுமதி 2,132,955 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20,23,24,38 வயதுடையவர்கள் என்பதுடன் அவர்களில் ஒருவர் இந்திய பிரஜை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள் சுங்கப்பிரிவினரால் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு தலா 10000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.