17 அம்சக்
கோரிக்கைகளை முன்வைத்து
கிராம உத்தியோகத்தர்கள்
போராட்டத்தில் குதிக்க தீர்மானம்
நாடு
முழுவதிலுமுள்ள கிராம உத்தியோகத்தர்கள், 17
அம்சக் கோரிக்கைகளை
முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்
என, இலங்கை ஐக்கிய கிராம
அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது 17 அம்சக்
கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அனுப்பி வைத்துள்ளதாகவும்,
அதன் பிரதிகள்
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்
மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பொறுப்புக் கூறவேண்டிய
தரப்பினருக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும், குறித்த சங்கம்
தெரிவித்துள்ளது.
தங்களின்
கோரிக்கைகளுக்கு, பொறுப்புவாய்ந்த தரப்பினரிடமிருந்து
உரிய பதில்
கிடைக்காவிட்டால், ஒரு நாள்
அடையாள வேலைநிறுத்தப்
போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட அங்கத்தவர்கள் தீர்மானித்துள்ளனர்
என, இலங்கை ஐக்கிய கிராம
அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.