கிழக்கு பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவிகள் மீது
தண்ணீர் ஊற்றி பகிடிவதை.(வீடியோ இணைப்பு)
வந்தாறுமூலையில்
உள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்தில்
கல்வி கற்கும்
முதலாம் வருட
மாணவர்களுக்கு சிரேஸ்ட மாணவர்களால் நீரைப் பீய்ச்சியடித்து
மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை தொடர்பான வீடியோ காணொலி
ஒன்று வெளியாகி
பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
குறித்த
சம்பவம் தொடர்பாக
சமுக வலைத்தளங்களில்
பாரிய வாதப்பிரதி
வாதங்கள் நடைபெறும்
அதே வேளை
பல்கலைக்கழகத்தில் கற்கும் சில
முஸ்லிம் மாணவர்கள்
அப்படியொரு சம்பவம் அங்கு நடக்கவில்லை என்று
கூறியுள்ளனர்.அது வேறு ஒரு நிகழ்வின்
போது மேற்கொள்ளப்பட்ட
நீர் ஊற்றும்
செயல் என்றும்
கூறப்படுகின்ற போதிலும் பலரும் இதனை கண்டித்துள்ளனர்.
இலங்கையில்
பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மேற்கொள்வது
தண்டனைக்குரிய குற்றமாக உள்ள நிலையில் இவ்வாறான
பகிடிவதைகள் தொடர்கின்றமையும் அதனை சம்பந்தப்பட்டவர்கள் கண்டுகொள்ளாதிருப்பதும் கவலைக்குரியது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.