இந்தியா உதவியுடன் யாழ்ப்பாணத்தில்
தகவல் தொழில்நுட்ப பூங்கா:
பிரதமர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
யாழ்ப்பாணத்தில்
தகவல் தொழில்
நுட்ப பூங்கா அமைப்பது தொடர்பாக
இந்தியாவும், இலங்கையும்
உடன்பாடு ஒன்றில்
கையெழுத்திட்டுள்ளன.
இலங்கையில்
தமிழர்கள் அதிகம்
வாழும் வடமாகாண
மக்களின் பொருளாதாரத்தை
மேம்படுத்தவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும்,
உற்பத்தியை அதிகரிப்பதற்கும், வளர்ச்சியை
ஏற்படுத்துவதற்கும் இந்தியாவிலுள்ள தனியார்
துறையினர் தொழிற்சாலைகளை
உருவாக்கி அதிக
அளவு வேலைவாய்ப்புகளை
உருவாக்குவதற்கு ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்திய
அரசாங்கத்தின் 250 மில்லியன் ரூபா
கொடையின் மூலம்
இந்த தகவல் தொழில் நுட்ப பூங்கா கட்டப்படவுள்ளது.
அலரி
மாளிகையில் நேற்று நடந்த நிகழ்வில் இந்திய
தூதுவர் தரன்ஜித்
சிங் சந்துவும்,
அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக
அமைச்சின் செயலாளர்
கொடிகாரவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
இந்த
நிகழ்வில் பிரதமர்
ரணில் விக்ரமசிங்க,
அமைச்சர் மலிக்
சமரவிக்ரம, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா
உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கை
அரசினால் மேற்கொள்ளப்படும்
மக்கள் நலன்சார்
முன்னேற்றத் திட்டங்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும்
உதவிகளின் வரிசையில்
இத்திட்டமும் ஒன்றாகும். இந்த தகவல் தொழில்நுட்பப்
பூங்காவால் வடமாகாணத்தில் தகவல் தொடர்பு மற்றும்
தொழில்சார் சேவைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கவும் மேம்படுத்தவும்
உதவும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.