தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த இரண்டு
இளைஞர்களுக்கும் பிணை வழங்க முடியாது
நீதிமன்றம் அறிவிப்பு
27ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்
மிஹிந்தலை
- ரஜமஹா விகாரையின்
பழமையான தூபி
ஒன்றின் மீது
ஏறி புகைப்படம்
எடுத்த இரண்டு
இளைஞர்களுக்கும் பிணை வழங்க முடியாது என்று
நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அநுராதபுரம்
பிரதான மற்றும்
மேலதிக மாவட்ட
நீதவான் ஜனக
பிரசன்ன சமரசிங்க
இரண்டு மாணவர்களையும்
எதிர்வரும் 27ம் திகதி வரை மீண்டும்
விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
மூதூர்
பிரதேசத்தைச் சேர்ந்த ஜலால்தீன் றிஸ்னி அஹமத்( 18 )மற்றும் றாஸீக் முஹம்மத் ஜிப்ரி( 20 )வயதுடைய இரண்டு
இளைஞர்களே இவ்வாறு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,
இந்த சம்பவம்
தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.