கடல் கொந்தளிப்பு
அவதானமாக இருக்குமாறு
வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு
புத்தளத்திலிருந்து
மன்னார் வரையிலும்
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான
கடல் அவ்வப்போது
ஓரளவு கொந்தளிப்பாக
காணப்படும் என்று வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடலில்
பயணம் செய்வோரும்
மீனவ சமூகமும்
இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
புத்தளத்திலிருந்து
கொழும்பு மற்றும்
காலி ஊடாக
மாத்தறை வரையான
கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது
இடியுடன் கூடிய
மழையோ பெய்யக்
கூடும்.
நாட்டைச்
சூழவுள்ள கடற்பரப்புகளில்
காற்றானது தென்மேற்கு
திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு
30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
புத்தளத்திலிருந்து
மன்னார் ஊடாக
காங்கேசன்துறை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான
கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு
50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.