காணியில்
வேலியிட சென்ற
முஸ்லிம்கள் மீது தாக்குதல்!
அக்கரைப்பற்று
பொத்துவில் வீதியில் சம்பவம்
அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு
அருகில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற
முஸ்லிம்கள் மீதும் அவர்களின் மோட்டார் சைக்கிள்கள்மீதும் சற்றுமுன்னர் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும்
உறுப்பினர்களின் தூண்டுதலில் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
கறுப்புத் துணியால் முகத்தை மூடிக்கொண்டு வந்து திட்டமிட்ட
வகையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
காயப்பட்டோர் விபரம்
1) சமீம் - உரிமையாளர்
2) ஜம்சீத் அலி (பிறண்டர்ஸ்)
3) மும்தாஸ் (கொங்கிறீட் கட்டார்)
4) நிசாம் (குயில் மாமா)
5) றிக்காஸ் (நசுஹூவின் மகன்)
6) ஹிப்பதுல் கரீம் (சியாம்)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.