இறுதிசடங்கின் போது தாயின் சவப்பெட்டி விழுந்து
நசுக்கியதில் மகன் மரணம்
   
இந்தோனேசியாவில் தாயின் இறுதிசடங்கின் போது சவப்பெட்டி விழுந்ததில் மகன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் சுலாவேசி தீவை சேர்ந்தவர் சமேன் கோண்டுரா (40). இவரது தாயார் மரணம் அடைந்துவிட்டார். எனவே அவரது இறுதிசடங்கு வடக்கு டோரஜா மாவட்டத்தில் பரின்டிங் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்தது.
அவரது உடலை சவப் பெட்டியில் வைத்து அதை மூங்கில் ஏணியில் தூக்கி சென்றனர். அப்போது அப்பெட்டி தவறி கீழே விழுந்தது.
அப்போது முன்புறம் சென்று கொண்டிருந்த சமேன் கோண்டோரா மீது சவப்பெட்டி விழுந்து நசுக்கியது. அதனால் படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் தனது தாயின் இறுதிசடங்கு முடியும் முன்பே அவர் பரிதாபமாக இறந்தார்.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top