கிளிநொச்சி
அம்பாள்குளம் கிராமத்தில்
பத்து பேரை தாக்கிய சிறுத்தை
பொது மக்களால் அடித்துக் கொலை
கிளிநொச்சி
அம்பாள்குளம் கிராமத்தில்
இன்று (21) காலை ஏழு மணி முதல்
மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி
திணைக்கள உத்தியோத்தர்
ஒருவர் உட்பட
பத்து பேரை
தாக்கி காயத்திற்கு
உட்படுத்திய சிறுத்தையொன்று பொது மக்களால்
அடித்துக் கொல்லப்பட்டுள்ளது.
கிராம
பொது மக்கள்
பற்றை ஒன்றுக்குள்
பதுங்கியிருந்த சிறுத்தையை சுற்றி வளைத்த நிலையில்,
பற்றைக்குள் இருந்து பாய்ந்த சிறுத்தை ஒருவரை
தாக்கிய நிலையில்,
ஏனைய பொதுமக்கள்
சேர்ந்து அதனை
பொல்லுகளால் தாக்கி
கொன்றனர்.
சம்பவ
இடத்தில்
கிளிநொச்சி பொலிஸார்,
கிராம அலுவலர்
உட்பட பலரும்
இருந்தனர்.
குறித்த
சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த
பத்து பேரும்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் சிகிசை பெற்றுவருகின்றனர்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.