தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்
தபால் திணைக்களப் பணியாளர்கள்
உறுதிபடத் தெரிவிப்பு

தீர்வு கிடைக்கும் வரை எமது பணிப்பகிஷ்கரிப்புப்  போராட்டம் தொடருமென வடமாகாணத் தபால் திணைக்களப் பணியாளர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
தொடர் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தபால் திணைக்களப் பணியாளர்களின் கோரிக்கைகள்  நிறைவேற்றப்படாத நிலையில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின்  தபால் திணைக்களப் பணியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (22) காலை முதல் யாழ். நகரிலுள்ள பிரதம தபாலகத்திற்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
தபால் திணைக்களத்தின் திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு முறைமையை உடனடியாகச் செயற்படுத்து, உப தபால் அதிபராக வேலை பார்ப்பவர்களின் உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் நாடாளாவிய ரீதியில் தொடர் பணிப் பகிஷ்கரிப்பபுப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top