முச்சக்கர வண்டி- மோட்டார் சைக்கிள் என்பனவற்றிற்கான
புதிய பெற்றோல் வகை அறிமுகம்
முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பனவற்றிற்கான புதிய பெற்றோல் வகை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சில் இடம்பெற்ற, பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் ,
"கடந்த காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையிருந்தது. நாம் அதை விரும்பிச் செய்யவில்லை. ஆனால் சில நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்காகவே எமது விருப்பதற்திற்கு மாறாக செயற்படவேண்டியிருந்தது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரிய நிலைதொடர்பாகவும் நாம் அறிந்திருந்தோம். தற்போது நாம் பொதுமக்களுக்கு எவ்வாறு வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்கலாம் என ஆலோசித்து வருகின்றோம்." என குறிப்பிட்டார்.
,
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.