தாதியர் சேவைக்கு
1,603 பேருக்கு நாளை நியமனம்
தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 1,603 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நாளை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
இதன் கீழ், 686 மூன்றாம் நிலை தாதி அதிகாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, ஆரம்ப தாதி கல்லூரிகளின் கீழ் வாட் முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் தொடர்பில் 800 பேருக்கும், பொதுச் சுகாதார தாதிகளாக 115 பேருக்கும் இதன் போது நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.