உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:
64 பேருக்கு செப்டம்பர் 12ஆம் திகதி வரையில்
விளக்கமறியல் நீடிப்பு
உயிர்த்த
ஞாயிறு தாக்குதலின்
பின்னர் தேசிய
தௌஹீத் ஜமாஅத் இயக்கத்துடன்
தொடர்புபட்டதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 64 பேரின்
விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி
வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நுவரேலியாவில்
உள்ள தேசிய
தௌபீக் ஜமாஅத் தலைமையகத்தில்
ஆயுத பயிற்சி
பெற்றதாக சந்தேகத்தின்
பேரில் கைதுசெய்யப்பட்ட
காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த
ஞாயிறு தாக்குதலின்
பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும்
விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில்
கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 12ஆம்
திகதி வரையான
விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.