காரில் எடுத்துச்சென்ற சவப்பெட்டியை
சோதித்த பொலிஸாருக்கு அதிர்ச்சி

போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது காரில் எடுத்துச்சென்ற சவப்பெட்டிகளை சோதித்த சந்தர்ப்பத்தில் அதில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு போதைப்பொருட்கள் தடுப்பு பொலிஸ் படை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. தீவிர வாகன சோதனைகளையும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அங்குள்ள சான்டான்டர் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அந்த காரில் 2 சவப்பெட்டிகள் இருப்பதைக் கண்டனர். ஆனாலும் அந்த சவப்பெட்டிகளை அவர்கள் கொஞ்சமும் தயக்கமின்றி இறக்கி திறந்து பார்த்தால் அங்கே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவற்றினுள் இறந்தவர்களின் உடல்கள் இல்லை.

மாறாக 300 கிலோ கஞ்சா சிறுசிறு பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். அவற்றை பறிமுதல் செய்தனர். சவப்பெட்டிகளில் கஞ்சாவை கடத்தி வந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top