பரசூட்
பயிற்சியின் போது
7000
அடி உயரத்தில் இருந்து
கீழே
விழுந்து இராணுவ அதிகாரி பலி
இலங்கை இராணுவ விஷேட படைப் பிரிவின் அதிகாரி ஒருவர்,
பரசூட்டில் இருந்து
குதித்த போது, நிலத்தில்
வீழ்ந்து மரணமானார்.
அம்பாறை, உஹன விமானப்படைத் தளத்தில் இன்று காலை இந்தச்
சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை விமானப்படை விமானத்தில் இருந்து, பரசூட் மூலம் குதிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த
விஷேட படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரே, எதிர்பாராத விதமாக நிலத்தில் வீழ்ந்து மரணமானார்.
சுமார் 7000 அடி உயரத்தில் இருந்து குதித்த வொரன்ட் ஒவ்பிசரின், பரசூட் சரியாக விரியாததால், அவர் நிலத்தில் வீ்ழ்ந்தாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.