வேகமாக கார் ஓட்டும்
ஜெஸிகா கோம்ப்ஸ் என்ற பெண்
விபத்தில் பலி

உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயர்பெற்ற ஜெஸிகா கோம்ப்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 39 வயதான ஜெஸிகா, ஜெட் விமானத்தின் இயந்திரத்தைப் பொருத்தி கார் ஓட்டுவதில் சிறந்தவராக உள்ளார். இதன் காரணமாகவே உலகில் வேகமாகக் கார் ஓட்டும் பெண் எனப் பெயரெடுத்தவர்.

கடந்த 2013ஆம் ஆண்டு மணிக்கு 398 கிலோ மீற்றர் வேகத்தில் காரை ஓட்டி சாதனை செய்தார். இதனைத் தொர்ந்து 483 கிலோ மீற்றர் வேகத்தில் காரை இயக்கி தனது சாதனையை தானே முறியடித்தார்.

இந்நிலையில் இந்தச் சாதனையையும் முறியடிக்க அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக தென்மேற்கு ஓரேகான் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானதில் ஜெஸிகா உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட் ஆற்றல் கொண்ட கார் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அது பற்றி மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top