உள்துறை அமைச்சராக
இருந்த போது அவரால்
திறந்து வைத்த அலுவலகத்தில்
உறங்கிய கைது
செய்யப்பட்ட சிதம்பரம்
கடந்த
காங்கிரஸ் ஆட்சியில்,
சிதம்பரம் உள்துறை
அமைச்சராக இருந்த
போது சிபிஐ
அமைப்பிற்கு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
தற்போது, மோசடி
வழக்கில் கைதாகியுள்ள
அவர், அந்த
அலுவலகத்தில் தான் நேற்று (ஆக.21) இரவு
விசாரிக்கப்ட்டு, அங்கேயே ஓய்வு எடுத்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிபிஐ
அமைப்புக்கு புதிய அலுவலகத்தை கடந்த 2011ம்
ஆண்டுஜூன் 30ம் திகதி அப்போதைய
பிரதமர் மன்மோகன்
சிங், உள்துறை
அஐமச்சராக இருந்த
சிதம்பரம் ஆகியோர்
திறந்து வைத்தனர்.
இதன் பின்னர்,
அங்கு வைக்கப்பட்டிருந்த
பார்வையாளர் குறிப்பேட்டில், சிதம்பரம்,
'1985 ம் ஆண்டு
முதல் சிபிஐ
அமைப்புடன் நெருங்கி பணியாற்றி வருகிறேன். இந்த
புதிய அலுவலகத்தை
பார்ப்பதில் பெருமையாக உள்ளது. இந்த இடம்
சிபிஐ அமைப்பை
மேலும் வலிமைபடுத்தட்டும்'
என்ற வாழ்த்து
செய்தியை பதிவு
செய்திருந்தார். தொடர்ந்து, விழாவில் அமைச்சர்கள் அனைவரும்,
புதிய அலுவலகத்தை
சுற்றிப் பார்த்தனர்.
இந்நிலையில்,
ஐஎன்எக்ஸ் மோசடி
வழக்கில், கைது
செய்யப்பட்ட சிதம்பரம், அவர் திறந்து வைத்த
அலுவலகத்தில் உள்ள அறை எண் 3ல்
வைக்கப்பட்டுள்ளார். இந்த அறை
முன்பு 2 பேர்
காவலுக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு
முழுவதும் அந்த
அறையில் தான்
சிதம்பரம் இருந்துள்ளார்.
கைதுக்குபின்னர், நேற்று (ஆக.,21) சிபிஐ அதிகாரிகள்
விசாரணை நடத்தவில்லை.
இன்று காலை,
சிதம்பரத்திற்கு, அவரது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு
வழங்கப்பட்டது. இதன் பின்னரே அவரிடம் விசாரணை
நடந்தது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.