கோட்டாபயவை சந்தித்த ரவூப் ஹக்கீம்.
சிறிலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் தலைவரான
அமைச்சர் ரவூப்
ஹக்கீம் நேற்று
முன்தினம், சிறிலங்கா பொதுஜன
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை, கொழும்பில்
உள்ள அவரது
வீட்டில் சந்தித்துள்ளார்.
தனது
புதல்வியின் திருமணத்திற்கான அழைப்பிதழை
வழங்குவதற்காக அமைச்சர் ஹக்கீம், கோத்தபாயவின் வீட்டுக்கு
சென்றதாக கூறப்படுகிறது.
அமைச்சர்
ரவூப் ஹக்கீமின்
புதல்வியின் திருமணம் எதிர்வரும் 17ஆம் திகதி
நடைபெறவுள்ளது. அன்றைய தினமே நாடாளுமன்ற உறுப்பினர்
நாமல் ராஜபக்ஸவின் திருமணமும்
நடைபெறவுள்ளது.
இதனால்,
17ஆம் திகதி
திருமணத்திற்கு தன்னால் வர முடியாது என
தெரிவித்துள்ள கோத்தபாய, இரண்டாம் நாள் வைபவத்தில்
கலந்துக்கெள்வதாக கூறியுள்ளார்.
அமைச்சர்
ரவூப் ஹக்கீமும்,
கோத்தபாய ராஜபக்ஸவும் சிறிது
நேரம் நட்புறவாக
கலந்துரையாடியுள்ளனர். எந்த விடயங்கள்
குறித்து பேசினர்
என்ற தகவல்
வெளியாகவில்லை.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.