மஹிந்தவுடன் கனடிய தூதுவர், அகாஷி
தனித்தனியே சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்கினன், நேற்று  எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவைச் சந்தித்துப் பேசினார். மஹிந்த ராஜபக்ஸவின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பில் ஜி.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதேவேளை, இலங்கைக்கான ஜப்பானின் சிறப்பு சமாதான தூதுவராக முன்னர் பணியாற்றிய, யசூஷி அகாஷியும் நேற்று மஹிந்த ராஜபக்ஸவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான பொதுஜன பெரமுன, கோத்தாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள நிலையிலும், இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள நிலையிலும், இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top