பிள்ளைகளுக்கு நஞ்சு கொடுத்து
தந்தையும் தூக்கில் தொங்கி மரணம்
குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடே
கொலை சம்பவத்திற்கு காரணம்
புத்தளம்,
உடப்புவ, பள்ளிவாசல்பாடுவ
பகுதியில் 31 வயது நிரம்பிய தந்தை ஒருவர்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ்
ஊடக பிரிவு
தெரிவித்துள்ளது.
இதேவேளை,
தற்கொலை செய்து
கொண்டுள்ள தந்தை
தனது ஆண்
பிள்ளைகள் இருவருக்கும்
நஞ்சு வழங்கி
அவர்களையும் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த
ஆண் பிள்ளைகள்
13 மற்றும் 7 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த
ஆண் பிள்ளைகளின்
சடலங்கள் புத்தளம்
பொது வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதாவும், தந்தையின் சடலம்
வீட்டு அறையிலேயே
வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.