உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டமைக்கு
எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் போராட்டம்
மட்டக்களப்பு
மாவட்ட உள்ளூராட்சிமன்ற
உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று காலை
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு
மாவட்ட தமிழ்
மக்கள் விடுதலைப்புலிகள்
கட்சியை சேர்ந்த
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடத்தினர்.
கடந்த
27ஆம் திகதி
இரவு கல்லடி
பாலத்தில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ் மக்கள்
விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் இருவர் உட்பட
ஐந்து பேர்
தாக்கப்பட்டதற்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
வன்முறை
கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளிவை, மக்கள் பிரதிநிதிகள் மீது
தாக்குதல் நடத்தி
ஜனநாயகத்தின் குரல்வளையினை நசுக்காதே, தாக்காதே,
மக்கள்
பிரதிநிதிகளை தாக்காதே,வேண்டும் வேண்டும் நீதிவேண்டும்
போன்ற வாசகங்கள்
கொண்ட பதாகைகளையும்
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்த
போராட்டத்தில் மாநகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும்
பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.