அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு
எதிராக அஹங்கம பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்
அஹங்கம
பிரதேசத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக
இன்று எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஹங்கம
பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல் பாடசாலை ஒன்றை
திறப்பதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் , இராஜாங்க
அமைச்சர் புத்திக
பத்திரண, பிரதி
அமைச்சர் கருணாரத்ன
பரனவிதான ஆகியோர்
வரவிருந்த நிலையில்,
அமைச்சர் ரிஷாத்
பதியுதீனின் வருகைக்கு எதிராக பிரதேசவாசிகள் இவ்வாறு
எதிர்ப்பில் ஈடுபட்டனர் எனக் கூறப்படுகின்றது..
ஆர்ப்பாட்டக்காரர்கள்
அஹங்கம நகரில்
இருந்து அமைச்சர்
ரிஷாத் பதியுதீனுக்கு
எதிரான பதாதைகளுடன்
ஹோட்டல் பாடசாலை
அமைந்துள்ள இடத்தை நோக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹோட்டல் பாடசாலை
அமைந்துள்ள பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும்,
இந்த வைபவத்தில்
அமைச்சர் ரிஷாத்
பதியுதீன் கலந்துக்
கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.