முதன் முறையாக கோத்தபாய ராஜபக்ஸ
கலந்துகொண்ட கூட்டம்!
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்று நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தார்.
இந்த கூட்டம் கொழும்பு – விஜேராம மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது, ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்ட பின்னர் கோத்தபாய ராஜபக்ச பங்கேற்ற முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.