நகை
திருட்டு
சம்மாந்துறை
பகுதியை சேர்ந்த
சந்தேக
நபர் கல்முனையில் கைது
அம்பாறை பிரதேசத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகை திருட்டு சம்பங்களுடன்
தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரை கல்முனை குற்றத் தடுப்பு பிரிவு மற்றும்
பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவினர்
இணைந்து கைது செய்துள்ளனர்.
இன்று 28 ஆம் திகதி புதன்கிழமை காலை குறித்த சந்தேக நபரிடம்
இருந்து மீட்கப்பட்ட 19.45 பவுண் பெறுமதியான நகைகள் உருக்கப்பட்ட நிலையில் சில நகைகடைகளில் இருந்தும்
அடகு நிறுவனங்களில் இருந்தும் மீட்கப்பட்டன.
இவ்வாறு நகை திருட்டுடன் கைதான சந்தேக நபர் சம்மாந்துறை
பகுதியை சேர்ந்த முகைதீன் பாவா றிஷாட் அஹமத் (27) என்பவராவார்.
மீட்கப்பட்ட நகைகள் யாவும் அக்கரைப்பற்று கல்முனை முஸ்லிம்
பகுதி போன்ற இடங்களில் உள்ள வீடுகளில் கூரைகள் பிரிக்கப்பட்டு களவாடப்பட்ட
நிலையில் அக்கரைப்பற்று கல்முனை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.
இதன் பின்னர் குறித்த திருட்டு தொடர்பாக பொலிஸ்
அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவு கல்முனை குற்றத் தடுப்பு
பிரிவு இணைந்து குறித்த திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபரை கைது செய்து
களவாடப்பட்ட நகைகளை மீட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எல்.ஏ
சூரிய பண்டார கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச் சுஜீத் பிரியந்த உப
பொலிஸ் பரிசோதகர் வை.அருணன் மாவட்ட புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் ரவூப் மற்றும்
ஏ.எல்.எம் நவாஸ் பொலிஸ் கான்ஸ்டபிள் என்.கீர்த்தனன் உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.