அமெரிக்காவில்
பயன்படுத்தப்பட்ட வெடிபொருளே
இலங்கையிலும்
பயன்படுத்தப்பட்டுள்ளது
அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்திற்கு தாக்குதல்
நடத்துவதற்காக பயன்படுத்திய யூரியா நைட்ரேட் உள்ளடங்கிய வெடிபொருளே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுகாக தீவிரவாதிகளினால்
பயன்படுத்தப்பட்டு இருந்ததாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை
செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவினர்
தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே
அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட,
முன்னாள் பொலிஸ்மா அதிபர்
என்.கே.இளங்ககோன், சட்டம் மற்றும்
அமைதி தொடர்பான அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் நேற்று
சாட்சி வழங்கியிருந்தனர்.
இதன்போதே தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக சாட்சி வழங்க
வரவில்லை எனவும் ஜனாதிபதி நியமித்த மூவர் அடங்கிய குழுவின் உறுப்பினர் என்ற
அடிப்படையிலேயே சாட்சி வழங்க வந்ததாகவும்
உயர்நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.