கல்முனை நகரம்
முக்கியத்துவம் இல்லாத
நகரமாக மாறிவிட்டதா?
மக்கள் கேள்வி
இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றான கல்முனை நகரில் ஒசுசல கிளை திறந்து வைப்பது எப்போது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நிந்தவூர், அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ஒசுசல கிளை திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்மாந்துறையிலும் ஒசுசல கிளை திறந்துவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்படியான நிலையில் கல்முனையில் இன்னும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என
மக்கள் தெரிவிக்கின்றனர்.
கல்முனை நகரம் முக்கியத்துவம் இல்லாத நகரமாக மாறிவிட்டதா? இல்லை இப்பிரதேசத்தில் அபிவிருத்திகளில் அக்கறை செலுத்தாத அரசியல்வாதிகள் இருந்து கொண்டிருக்கிறார்களா என கல்முனப் பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.