காஷ்மீர் மசோதாக்கள்;
லோக்சபாவிலும் நிறைவேற்றம்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோதா மற்றும் காஷ்மீரை இரண்டாக பிரிப்பதற்கான மசோதா லோக்சபாவில் இன்று (ஆக.,6) நிறைவேற்றப்பட்டது.
ஜம்மு - காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. இதைதொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ராஜ்யசபாவில் நேற்று(ஆக.,05) நிறைவேறியது.
இந்நிலையில், லோக்சபாவில் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான மசேதா இன்று(ஆக., 6) தாக்கல் செய்யப்பட்டது.
370 பிரிவை ரத்து செய்வதற்கான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் மசோதாவை ரத்து செய்வதற்கு, ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவானது. காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவாக 361 வாக்குகளும், எதிராக 66 வாக்குகளும் பதிவானது.
லோக்சபா, ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரது ஒப்புதலுக்கு பின் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக காஷ்மீரும், சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் பிரிக்கப்படும். பிரதமர் மோடியின் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இவ்வெற்றியை நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
0 comments:
Post a Comment