2020 பொதுத் தேர்தலுக்கான
வேட்பு மனுக்களை
ஏற்றுக் கொள்ளும் பணி இன்று முதல்
2020 பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை
ஏற்றுக் கொள்ளும்
பணி இன்று
ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை
தேர்தலுக்கான பொலிஸ் பாதுகாப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படும் என்று தேர்தல்களுக்கு பொறுப்பான
பிரதி பொலிஸ்மா
அதிபர் பிரியந்த
வீரசூரிய தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்கள்
ஏற்றுக் கொள்ளப்படும்
சகல இடங்களிலும்
பொலிஸார் கடமையில்
ஈடுபடுத்தப்படுவார்கள். 19ஆம் திகதிக்கு
பின்னரும் பாதுகாப்பு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. காலை
8.30 முதல் மாலை 4.15 வரை வேட்புமனுக்களை தாக்கல்
செய்யலாம். வார இறுதி நாட்களில் வேட்புமனுக்கள்
ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
19ஆம் திகதி
பகல் 12.30 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய
முடியும் என்றும்
அவர் தெரிவித்தார்.
தபால்மூல
வாக்களிப்பு அடுத்த மாதம் 8 ஆம், 9 ஆம்
திகதிகளில் இடம்பெறவுள்ளது. இம்மாதம்
16 ஆம் திகதி
வரை தபால்மூல
வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க முடியும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.