கல்முனை முதல்வரிடம்
பெற்றோர்கள் விடுக்கும்  வேண்டுகோள்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி, ஸாஹிறாக் கல்லூரி அமைந்துள்ள  வீதி, சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வீதி, சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதி ஆகிய பாதைகள் ஊடாக காலை 7.00 மணி தொடக்கம் 8.00 மணிவரையும் இதேபோன்று பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் வீடு திரும்பும் நேரத்திலும் கனரக வாகனங்கள் மற்றும் மாநகர சபையின் குப்பைகளை அகற்றும் வாகனங்கள் இப்பாதைகளினூடாகச் செல்வதற்கு கல்முனை மாநகர சபை அனுமதிக்கக்கூடாது என பெற்றோர்கள் கல்முனை முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
குறிப்பிட்ட பாடசாலைகள் அமைந்துள்ள பாதைகளில் கனரக வாகனங்கள் செல்வதனால் போக்குவரத்து சிக்கலாகி மாணவர்கள் பாடசாலை செல்வதில் பல அசெளகரியங்களுக்குள்ளாவதுடன் உரிய நேரத்திற்கு பாடசாலை செல்லமுடியாத நிலையும் ஏற்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது விடயத்தில் கல்முனை மாநகர சபை முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top