அம்பாறை மாவட்டம் ஒரு சிலருக்கு சீதனமா?
மக்கள் கேள்வி!
முஸ்லிம்காங்கிரஸுக்கு ஹரீஸ்,மன்சூர்,பைசால் ஆகியோரை விட்டால் அமபாறை மாவட்டத்தில் படித்த பண்பான வேறு ஆட்கள்இல்லையா? இந்த மூவருக்கும்தான் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் செல்வதற்கு சீதனம் எழுதி கொடுத்தாகிவிட்டதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸில் மூத்த போராளி, இளைய போராளி, என தங்களுக்குள்ளே தாங்களாகவே பட்டம்சூட்டி மக்களை ஏமாற்றி கனவில் மிதக்கும் இவர்களிடம் முஸ்லிம் சமூகத்திற்கு
செய்த அபிவிருத்தி பற்றி சாதனை பட்டியல் கோர வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
போராளிகள் என்று தம்மை தாமே பொய்யாக பட்டம் சூட்டியுள்ள இவர்கள் சமூகத்தை காப்பாற்ற போவதுமில்லை. பிரதேசங்களை அபிவிருத்தி செய்யப் போவதுமில்லை.
முஸ்லிம் சமூகத்தை நிம்மதியாக வாழவிடப் போவதுமில்லை என்றும் கூறுகின்றனர்.
தங்களையே அபிவிருத்தி செய்து கொண்டு திரியும் இந்த பொய்யான
போராளிகளின் கதைகளுக்கு நாம் ஏமாந்துவிடப்போவதில்லை. எங்கள் இளைஞர்களும் ஏமாற மாட்டார்கள் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.