இத்தாலியை புரட்டி எடுக்கும் கொரோனா...
ஒரே நாளில் 627 பேர்
உயிரிழப்பு
இத்தாலியில் தொடர்ந்து அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா
வைரசுக்கு நேற்று அதிக அளவாக 627 பேர் பலியாகி உள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே செல்கிறது, ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உட்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி
வருகிறது.
கொரோனா வைரசுக்கு சீனாவை விட இத்தாலியில் உயிரிழந்தோர்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தாலியில் இதுவரை இல்லாத வகையில் நேற்று மட்டும்
கொரோனாவுக்கு 627 பேர்
உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4032 ஆக உயர்ந்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.