இத்தாலி நாளிதழில் 10 பக்கத்துக்கு
கொரோனா மரண அறிவிப்பு
இத்தாலிய நாளிதழ் ஒன்றில், கடந்த 13ம் திகதி வெளியான பதிப்பில், 10 பக்கத்துக்கு கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் மரண அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலானது.
சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில், கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இத்தாலியில், நேற்று முன்தினம் மட்டும், 1,441 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 1,809ஆக உயர்ந்துள்ளது. அங்கு, 24 ஆயிரத்து, 747 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தாலியில் கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நகராமான பெர்காமாவிலிருந்து வெளியாகும், 'லிகோ டி பெர்காமா' என்ற நாளிதழில், வெளியான கொரோனா மரண அறிவிப்பு, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த பெப்.,9ம் திகதி இந்நாளிதழில் வெளியான மரண அறிவிப்பு அரை பக்கம் அளவுக்கு மட்டுமே இருந்த நிலையில் கடந்த 13ம் திகதி (மார்ச் 13), வெளியான பதிப்பில், 10 பக்கத்துக்கு கொரோனா மரண அறிவிப்பு இருந்தது.
இதனை ஒருவர் சமூக வலைதளமான டுவிட்டரில் வீடியோவாக வெளியிட, அது வைரலானது. நெட்டிசன்கள், இத்தாலிக்காக தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.