உருவங்கள் பொறிக்கப்பட்ட பலகைகள்
 உடனடியாக அகற்றப்படல் வேண்டும்
மக்கள் கோரிக்கை


பள்ளிவாசல்கள் வளவுகளுக்குள் வைக்கப்பட்டிருக்கும் அரசியல்வாதிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட விளம்பரம் தேடும் பலகைகள் உடனடியாக அகற்றப்படல் வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் அவர்களின் உருவப் படங்கள் அகற்றப்படல் வேண்டும் என மக்களால் வேண்டுகோள் விடுக்ககப்படுகின்றது.

இதேபோன்று வீதிகளிலும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ள இவ்வாறான உருவங்கள் பொறிக்கப்பட்ட பலகைகளும் அகற்றப்படல் வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

எதிர்வரும் காலம் பொதுத்தேர்தல் காலம் என்பதாலும் வீதிகளில் உள்ள இவ்வாறான விளம்பர பலகைகள் அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்படுகிறது.

குறிப்பு: பள்ளிவாசல்களுக்கோ, வீதி செப்பனிடவோ வழங்கிய பணம் அரசியல்வாதிகளின் சொந்த வீட்டுப் பணம் அல்ல அது மக்களின் பணம் அதனை பகிர்ந்தவர்களே அரசியல்வாதிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top