17
ஆயிரத்தை கடந்த
பலி எண்ணிக்கை
- திணறும் இங்கிலாந்து
இங்கிலாந்து
நாட்டில் கொரோனாவுக்கு
நேற்று ஒரே
நாளில் 823 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு
வைரசுக்கு பலியானோர்
எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது.
உலகம்
முழுவதும் 210 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா
வைரஸ் தற்போதைய
நிலவரப்படி 25 லட்சத்து 52 ஆயிரத்து 491 பேருக்கு பரவியுள்ளது.
வைரஸ்
பாதிக்கப்பட்டவர்களில் 16 லட்சத்து 86 ஆயிரத்து
827 பேர் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று
வருபவர்களில் 57 ஆயிரத்து 254 பேரின் நிலைமை மிகவும்
கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ்
பரவியவர்களில் 6 லட்சத்து 88 ஆயிரத்து 430 பேர் சிகிச்சைக்கு
பின் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், இந்த
கொடிய வைரசுக்கு
இதுவரை ஒரு
லட்சத்து 77 ஆயிரத்து 234 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில்
கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்
தற்போது அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய
நாடுகளை புரட்டி
எடுத்து வருகிறது.
ஐரோப்பிய
நாடுகளில் இத்தாலி,
ஸ்பெயின், பிரான்சுக்கு
அடுத்தபடியாக வைரஸ் இங்கிலாந்தில் நிலை கொண்டுள்ளது.
தற்போதைய
நிலவரப்படி, இங்கிலாந்து நாட்டில் ஒரு லட்சத்து
29 ஆயிரத்து 44 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக
நேற்று ஒரே
நாளில் புதிதாக
4 ஆயிரத்து 301 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.
மேலும்,
அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே
நாளில் 828 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இங்கிலாந்தில்
கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 337 ஆக
அதிகரித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.