பலங்கொடயில் தீ விபத்து
- தந்தை, மகள் பலி
- தாயும் மகனும் படுகாயம்
பலாங்கொட, கல்கொட பகுதியில் உள்ள விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 50 வயதுடைய நபர் மற்றும் 19 வயதுடைய யுவதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்தில் தாய் மற்றும் மகன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலாங்கொட பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.