ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள
நிலையில் வெளியில் செல்வது எப்படி
தேசிய அடையாள அட்டையின்
நிலையில் வெளியில் செல்வது எப்படி
தேசிய அடையாள அட்டையின்
இறுதி இரண்டு இலக்கங்களின் அடிப்படையில்
வெளிச்செல்ல அனுமதி
உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய
பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் தமது வீடுகளில் இருந்து
வெளிச்செல்ல வேண்டும். அத்தகைய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நடந்து சென்றடைய
முடியுமான அருகில் உள்ள விற்பனை நிலையங்களை தெரிவுசெய்ய வேண்டும்.
அத்தியாவசிய தேவைகளுக்காக என்ற போதும் வீட்டிலிருந்து
வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவது தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலக்கங்களின்
அடிப்படையிலாகும். அந்த வகையில் திங்கட் கிழமை நாட்களில் வெளிச்செல்ல
அனுமதிக்கப்படுவோர் இலக்கம் 1அல்லது 2 என்ற இலக்கங்களை
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களாக கொண்டுள்ளவர்கள் மட்டுமேயாகும்.
வாரத்தின் ஏனைய நாட்களில் வீடுகளில் இருந்து
வெளிச்செல்வதற்கு பின்வருமாறு இடமளிக்கப்படும்.
திங்கட்கிழமை: அடையாள அட்டையின் இறுதி
இலக்கமாக 1 அல்லது 2 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
செவ்வாய்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3அல்லது 4 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
புதன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
வியாழன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
வெள்ளி : அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.