அமெரிக்காவில் ஒரே நாளில்
4,591
பேர் கொரோனாவுக்கு பலி
கொரோனா
கோரத்தாண்டவம் ஆடும் அமெரிக்காவில் நேற்று ஒரே
நாளில் 4,591 பேர் பலியாகி உள்ளனர்.
இதற்கு
முன் அமெரிக்காவில்
ஒரே நாளில்
அதிகபட்சமாக 2,569 பேர் உயிரிழந்தனர்.
தினமும் அதிகரிக்கும்
உயரிழப்பால் அமெரிக்க மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில்
கொரோனாவுக்கு புதிதாக 29,000 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்
பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை
அங்கு 7 லட்சத்தை
தாண்டியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 37,000க்கும்
அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்
நியூயார்க்
நகரில் மட்டும்
கடந்த வாரத்தில்
3,778 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அமெரிக்காவுக்கு
அடுத்தபடியாக இத்தாலியில் 22, 179 பேரும்,
ஸ்பெயினில் 19,130 பேரும், பிரான்ஸில்
17,920 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.